இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் செளரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சௌரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,அவருக்கு கொரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் வெளியாகியுள்ளது.